Thursday, October 23, 2008

தப்புத் தாளங்கள்....

2008102355691301

Picture Courtesy: The Hindu



இதற்கு அது என
இரு கோடுகளாக
இணையாயிருக்கும்...
இருப்பினும் இரண்டும்
இணையாதிருக்கும்....

இருளில் கிடக்கிறது அது
இனவெறி கண்டு !!
இத்தனைக்கும் அது
இயல்பாகவே உறுதிமிக்க
இரும்புத் துண்டு !!

இது தான்
இருப்புப் பாதை !!
இன்று அதற்கு
இலேசில் குணமாகா வாதை !!

வாசிக்கும் ஏடோ
வசிக்கும் நாடோ

தக்க பிணைப்பின்றேல்
தனித் தனியாய்ப் பிய்ந்து விடும் !!
தலை தொய்ந்து விடும் !!

இமயம் முதல் குமரி வரை
இந்தியாவை இணைப்பது
இரயில்வே துறை !!
இன்றதன் முகத்தில்
இரத்தக் கறை !!

இயல்பாகவே எனக்கு
இரயில்வே இலாகாவிடம்
மட்டற்ற மதிப்புண்டு !!
இந்தியன் என அனற்றும்
ஈனர் சில செயலால்
இன்று கிடக்கிறேன் கொதிப்புண்டு !!

மாநிலத்துக்கு மாநிலம்
தலைவிரிக்கிறது வன்முறை !!
பார்த்திருக்கிறோம் நாமிதனை
பாரதத்தில் பன்முறை !!

கை கால் உதறி…
கணமும் பதறி..
கவலையில் கதறி....

மக்கள் வெறிக்கின்றனர் !!
எஞ்சியோர் இரயிலையே எரிக்கின்றனர் !!

எல்லாவற்றுக்கும் காரணம்
எங்கோ ஒரு மடையன்
எவர் எவரையோ
நையப் புடைத்தான் !!
மராட்டிய மண்
மராத்தியர்க்கே என
கையைத் துடைத்தான் !!

போதாததற்கு
போதும்
”போ உன் ஊருக்கு” என
போக்கற்றாரை மிரட்டுகிறான் !!
பொதுப் பணியில் சேர
பொதுத் தேர்வுக்கு வந்தாரை
விரட்டுகிறான் !!

நாடு தீப்பந்தத்தில் !!
நம் பிரதமர் கவனமெல்லாம்
நடந்து முடிந்த
அணு சக்தி ஒப்பந்தத்தில் !!

பிரதி தினமும்
பிரளயமான பூமி பீகார் !!
இப்படி ஒன்று நடக்க
இனி லல்லுவும் அங்கே போகார் !

தீப்பற்றி எரிகிறது
திசை எங்கும் !!
கை சொறிகிறாரா
மன்மோகன் சிங்கும் ?

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home