Wednesday, October 15, 2008

உயரப் பறக்கா ஊர்க்குருவிகள். . .

3401532220_rajthackeray

ஏறுமுகமாய் எண்ணை
விலையும்..
வீழுமுகமாய் வர்த்தக
நிலையும்...

இரு குழுமத்தை அழுத்தியது
ஒன்று சேர்ந்து !!
போயின அவை
படு சோர்ந்து !!

மக்களும்
பணத்திடை புத்தி வைக்க...
பயணத்தை ஒத்தி வைக்க...

அங்கும் இங்கும் செல்லாது
அவரவர் இருக்கையில்
அவரவர் இருக்க..
இலாபம் காணமுடியாது
இந்நிறுவனங்களை இந்நிலை
இறுக்க

முடியவில்லை அவற்றால்
முன்போல் ”இறக்கை” விரிக்க..
முகத்தில் முழுப்பொழுதும்
முறுவல் தரிக்க...

தன் குறை சொல்லியவை
தனித்து போராடி அலுக்க...
விழைந்தன விரைவாய்
வியாபாரத்தில் கை குலுக்க.....

இரு நிறுவனம்
இணையுங்கால்..
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில வேலைகளை
பிணையுங்கால்....

ஒரே வேலை செய்யும்
ஒரு சிலரை
சேமிப்பை முன்னிறுத்தி
வேலையினின்று சேதிக்கலாம்..
பாதிக்கப்பட்டாரை அது
பெரிதும் சோதிக்கலாம்....

அதற்காக அரசியல்
அங்கே எப்படி
அடியெடுக்கலாம் ?
”சட்டம் தன் கையில்” என
சனம் என்னணம்
முடிவெடுக்கலாம் ?

செய்த செயலின்
செய் விதம் முறையா ?
"செய்ய" செயலின்றேல்
செய்தவர்க்கு சிறையா?

இந்திய நீதிமன்றங்களே
இதனைச் சொல்ல வேணும் !!
எடுப்பார் கைப்பிள்ளையாக
அது மாறிட
இந்தியனின் நிலை கோணும் !!

மிக ஆத்திரம் கொண்ட
மகராட்டிர மக்களே !!
கேளுங்கள் எமது சொற்களே !!

தாக்கரேயிடம் தஞ்சம் என
ஏன் போனீர் ?
அனேகருக்கு கேள்விக்குறியாக
ஏன் ஆனீர் ?

சட்டத்தை கையிலெடுக்கலாமா
தனியொருவன் ?!
அப்படியே எடுத்தாலும்
அவனை விட்டு வைக்கலாமா
இனியொருவன் ?!

நீரா அவனுக்கு பொருட்டு?
தீச்சொல்லன்றி வேறு அறியானால்
தீராது உமது இருட்டு !!

உம்மைக் காக்கப் போவது
சட்டப் பேனாவா?
நவ நிர்மாண் சேனாவா ?

யார் பெரிய குற்றவாளி?
அரசியல் அமைப்புச் சட்டம்
அறவே மறந்து
அளவுக்கதிகமாக ஆடுபவனா?
அல்லது
அவனது சேவை நாடுபவனா?

அத்தகையோன் இதனாலன்றோ
அமரத்துவம் பெறுகின்றான் ?
அதற்காகத்தானே அனேகன்
அத்தொழிலுக்கே வருகின்றான் !!

அவனை ...
காராக்கிருகத்தில் தள்ளவும்
முளையிலேயே கிள்ளவும்

முனைந்து ஒரு
முடிவை எடுக்கவேண்டும்
முதல்வர் தேஷ்முக்கும் !!
இல்லையேல்....
சட்டம் ஒழுங்கின்றி
சந்தி சிரிக்கும்
எட்டுத் திக்கும் !!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home