Wednesday, October 22, 2008

நதியும்.....விதியும்....

தமிழில்..
நாற்றம் என்றால்
நல் வாசனை !!
வேண்டாம் வீண் யோசனை !!

துர்நாற்றமே நுகர்வாரை
குப்புற அடிக்கும் !!
சட்டென கை
மூக்கை பிடிக்கும் !!

தமிழ்நாடு என்றதும்
துர்நாற்றத்திற்கு சொல்வார்
கூவத்தை !!
காலம் காலமாக
களைவாரில்லை ஒருவரும்
அதன் பாவத்தை !!

அக் கறை அகற்றும்
அக்கறை சிலருக்கு
அவ்வப்போது எழும் !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அனேக யோசனைகள்
அத்தினம் காதில் விழும் !!

ஒருமித்து ஊர்
ஒரு நாள் காலை
சோம்பல் முறிக்கையில்...
அவசரமாக பல
அர்த்தமற்ற யோசனைகள்
அரசுக்கு ஓர் அறிக்கையில்.. !!

கூவத்தின் துர்நாற்றம்
அசுத்த நீர் தேங்குவதால் !!
விடுபடலாம் அது
விரைவாய் தண்ணீர்
நகriரினின்று நீங்குவதால் !!

ஆழ்ந்து கவனிக்க வேண்டும்
ஆழ் கடலில்
ஆறு கலக்கும் வாயினை !!
அதன் மூலம் களையலாம்
அவல நோயினை !!

ஆங்கு தடைகள் அகல
ஆறு வேகமாய் நகல

போகலாம் கெட்ட வாடை !!
போற்றலாம் உலகு தமிழ் நாடை !!

இன்றளவில்
இவ்வாறு ஒரு யோசனை...
சந்தனம் என்றதும்
வருமா வாசனை ?

அதனை உரைக்க வேண்டும் !!
அவ்வகையில்
அரசுக்கும் உரைக்க வேண்டும் !!
அதனை மக்கள்
உரைக்க வேண்டும் !

மரம் ஒன்று நடுவதால்
மாறாது புவனம் !!
கட்டற்ற கழிவுகள்
கணக்கற்று கூவத்தில் கலப்பதில்
அனைவருக்கும் தேவை கவனம் !!

நகரம் கிடக்கிறது பிணியில் !!
நடக்கிறது பல சனம்
நமக்கென்ன என
“ஐந்து நிமிடப்” பணியில் !!

வீடு வீடாய்
வீணில் கூவத்தில்
வீட்டுக் கழிவுகளை கொட்ட...
வேண்டாம் இனியும்
அரசைத் திட்ட !!

நிறுவப்பட வேண்டும்
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் !!
நடக்க வேண்டும் அதற்கான
நடைமுறை வேலைகள் !!

அவ்வப்போது
அரசு காட்டுகிறது
“சுத்தம் சோறு போடும்” எனும்
அழகான படத்தை !!
திக்கற்ற மக்கள்
தினமும் நம்புவதோ
திறந்த வெளி கழிவிடத்தை !!

திகட்டலாம் நமக்கு
அவர் நடத்தை !!
”அவசரத்திற்கு”
அவர் அமர
அரசு கட்டித் தர வேண்டும்
அங்கிங்கெனாது
அனேக இடத்தை !!

இவையே இதற்கு
இறுதியான முடிவு !!
இவையன்றி இல்லை
இன்ன பிறவற்றால் விடிவு !

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home