Tuesday, September 02, 2008

ஆனைக்கா ஆடலரசன்.......

IMG_2692

அவன்
சிவன் !!

பிறை அணிந்தவன் !!
பிரணவத்தின் பொருளுணர
பிள்ளையின்
பிஞ்சுப் பாதம் பணிந்தவன் !!

காவிரி தீரத்தில்..
கணமும் ஈரத்தில்..

அருளுகின்றான் அன்பர்க்கு !!
அன்பாய் அஞ்செழுத்தாம்
“நமசிவாய” என்பர்க்கு !!

எந்நாளும் அவன் தொழில்
எதை என்று அழிக்கலாமென !!
ஐயன் அவன் நினைவதில்லை
"ஐந்தை எட்டில்" கழிக்கலாமென !!

அவ்வூரில்
அவனுறை நாயகி
அகிலாண்டேஸ்வரி !!
அகிலம் காக்கும் ஈஸ்வரி !!

அவளது பெயரில் ஆரம்பித்து
அவளை ஆராதிக்கும் க்ருதியில்
ஆர்வலர் காணலாம்
அழகான வரி !!

கோபமான கணவனுக்கு
அவளே தகுந்தவள் !!
உக்கிரம் மிகுந்தவள் !!

அவள் எதிரே
அக்கோயிலுள் இருப்பவன்
அவளது மூத்த மகன் !!
அழகு வினாயகன் !!

IMG_2693

ஆனைக்கா என
அழைக்கப்பெறும்
அக்கோயில்

அமைந்திருக்கிறது
அரங்கத்தினின்று
அஞ்சு கல் தூரத்தில் !!
அங்கு போயிருந்தேன்
மதிய நேரத்தில் !!

அக்கோயிலின் அழகை
அகத்தில் காணலாம்
”ஜம்புபதே”யில் !!
அவ்வழகுடன்
அப்பழுக்கில்லாதிருக்கிறது
அதன் கோபுர வாயில் !!

கோயில் எங்கும்
“தமிழில் அர்ச்சனை”
எனும் பலகை !!

"கடவுள் இல்லை” என்பார்
கடவுள் இருக்கும் இடத்திற்கும்

விடுத்திருக்கும் உத்தரவை எண்ணி
வியந்தேன் உலகை !!

அனேகமாய்
அர்ச்சனை என்றால்
அர்ச்சகர் சொல்ல வேண்டும்
அர்ச்சிப்பாரது பிரவரம் கோத்திரம் !!
அதுவே சாத்திரம் !!

அர்ச்சகர் அன்று
அசமஞ்சமாய் நின்றார்
அதனைச் செப்பாது !!
அவரை பக்தரொருவர்
அரை நிமிடம் பொரித்தார்
அதனை ஒப்பாது !!

IMG_2694

வற்றாத நீருக்கு மத்தியில்
வடிவில் சிறிய லிங்கம் !!
பார்க்கப் பார்க்க
புளகாங்கிதம் அடையும் அங்கம் !!

கல்லா? கடவுளா?
பட்டையா? நாமமா?
அரியா? அரனா?
எத்துணை சண்டை - அப்பப்பா
எத்துணை சண்டை !!

அடியும் முடியும்
அறிய முடியாதவனை
அறிய விழைகிறோம் !!
ஆக்கும் செயலற்று
ஆர்க்கும் உதவாத
ஆர்ப்பாட்டத்துள் நுழைகிறோம் !!

உச்ச கால பூசை முடித்து..
வாங்கிய நீறு குங்குமத்தை
காகிதத்தில் மடித்து…

IMG_2695

சுற்று சுற்றி வெளியில் வர
சூரியன் இருந்தான் உச்சியில் !!
அடுத்து செல்லுமிடத்தும்
இருக்கிறான் ஒருவன் உச்சியில் !!

Labels: , , , , ,

1 Comments:

At 9/21/2014 7:59 AM , Blogger Unknown said...

Very Good poet.. Weldon Keeping going on.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home