Thursday, April 24, 2008

நதியும்...நாட்டு கதியும்

நாடகம்..
நடத்துகின்றது
கர்நாடகம்

இடையூறப்பா
இந்த எடியூரப்பா

தேவை...
தமிழகத்திற்கு நீர் !
ஏன் இருக்கின்றீர்
தடையாய் நீர்?

மொண்டு குடித்தாலும்
கொண்டு குடித்தாலும்

தீராது எமது விடாய் !
தெரிந்துமா தண்ணீரை
திறந்து விடாய்?

மேலும்...
சந்திப்பாய் சாவை
என பேசியிருக்கிறாய்
"சிவாஜி ராவை"...
கட்ட வேண்டும் உமது
நாவை...

நமது துயர்
நீக்கும் எண்ணம்
அங்கில்லை...
மத்திய ஆட்சியில்
நமக்கா பங்கில்லை?

பாவேந்தன் எங்கே?
முழங்கட்டும்
”பொங்கு தமிழர்க்கு
இன்னல்” என
சங்கே !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home