Monday, October 02, 2006

நேசக் கரம் - 02

திரும்பிய இடமெங்மும்
அமர் களம் !!
விளைத்தன அவை
அளவொண்ணா
அமர்க்களம் !!

பார்க்குமிடமெங்கும் பஞ்சம் !
பதை பதைத்தன பார்த்தோர்
நெஞ்சம் !!

என்ன செய்ய?
எதனை முதலில் கொய்ய?
என
பல முகம் தொய்ய...

பல நிறுவனங்கள்
நாடுகளின் தலைமை
ஆராய்ந்தன ஆப்பிரிக்காவின்
நிலைமை..

டயேரியா
மலேரியா என
நோய் தாக்கி
பல உயிர் மரிக்கிறது !
அனுதினமும் மன்பதை
சோகத்தை தரிக்கிறது !!

மக்கள் மனதில் இல்லை
லவலேசமும் கள்ளம் !!
ஆயினும் பொங்கி ஓடுகிறது
ரத்த வெள்ளம் !!

சோகம் அடங்க
எங்கு தொடங்க ?

அனுதினமும் அவை
யோசித்தன !
ஆய்வாளர் பலர்
புத்தகத்தை வாசித்தன !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home