Wednesday, September 20, 2006

சினிமா - 05

கவிதையின் அழகு
சொற்கள் !!
இக்கால பாடல்களை கேட்டால்
நற நறக்கின்றன
பற்கள் !!
கை தேடுகின்றன
கற்கள் !!

வார்த்தைக் கோர்வை !
இற்றை நாள் பாடல்கள்
தருகின்றன கேட்போர்க்கு
சோர்வை !!

கா கா கா
அந்தக் காலம் !!
தரலேன்னா உன் பேச்சு கா !
இந்தக் காலம் !!

கண்ணாலே பேசி பேசி
கொல்லாதே - அந்தக் காலம்
அப்படிப் போடு போடு போடு
அசத்திப் போடு கண்ணாலே
- இந்தக் காலம்!!

தமிழ் சினிமாவுக்கு
இவை தருகின்றன
நாளும் துயரம் !
என்னணம் நாம்
எதிர்பார்க்கலாம்
ஆஸ்கார் உயரம் ?

அமைதியைக் கெடுக்கும்
அசுர வேகம்
இற்றை நாள் பாடலில்
ஏகம் ஏகம் !!

இருக்கிறது அனைவருக்கும்
இனிமையான இசை கேட்கும்
ஆசை !
தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்
அளவிட முடியா
காசை !!

முடிவு?
செவிப்பறை கிழியும் அளவிற்கு
நவீன வாத்தியங்களின்
ஓசை !!

மொத்தத்தில்
no melody !
only malady !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home