Thursday, September 14, 2006

சினிமா - 03

கவிதையின் தரம்
சமூகத்திற்கு நாமிடும்
உரம்

கரம் - அது கை
தட்டவும் செய்யும் ! - சிரம்
குட்டவும் செய்யும் !!

இதனை உணர்ந்து
பாடல் எழுதியவர் பலர் !
அவர்கள் காலத்திய
தமிழ் சினிமா பாடல்கள்
வாடா மலர் !!

பட்டுக் கோட்டை !
அவர் பாடல்களில்
காண முடியுமோ
ஓட்டை ?

"ஆடை கட்டி வந்த நிலவோ"
போதும் !
மயங்கி விடுவாள் எம்
மாதும் !
கேட்காது பிற பாடல் எவர்
காதும் !!

மருதகாசி !
வாலியும் இவர் பாடலின்
விசுவாசி !!

"வண்ணத் தமிழ் பெண்ணோருத்தி
என்னருகில் வந்தாள்"
அப்பாடலை கேட்குந்தோறும்
தேடலாம் அவரது
செந் தாள் !!

இவ்வண்ணம்
கவர்ந்திழுக்கும் பாடல்கள்
கொண்ட படம்
மக்களை வென்றது !!
இப்படி பல காலம்
சென்றது !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home