Friday, September 22, 2006

சினிமா - 07

ஒப்புமைக்காக இஸ்லாமிய
பிரிவுகளை சொன்னேன் !
சாதிகளை வைத்து
ஒரு போதும் கவிதை
பின்னேன் !!

நான் மதச் சார்பாற்றவன் !!
காழ்ப்புணர்ச்சி அற்றவன் !!
எம் மதமும் சம்மதம்
எனும்
ஏகாந்த அறிவைப் பெற்றவன் !!
நல்லிணக்கமே
நாட்டின் உயிர் நாடி
எனக் கற்றவன் !!

பாட்டுக்கு அழகு
பதம் !!
நாட்டுக்கு அழகு
மதம் !!

முதலாவதை கட்டுவது
சுரங்கள் !!
இரண்டாவதை கட்டுவது
கரங்கள் !!

பதம் பதமாக
பாட்டைப் பிரித்து
அறியலாம் !!
மதம் மதமாக
நாட்டைப் பிரித்தால்
நாடே
முறியலாம் !!

இதை உணரின்
நிதம் இதம் !
உணராததால் தான்
நிதம் வதம் !!

பாடல்களுக்கும் வேண்டும்
இவ் விதிமுறை !!
கிளர்ந்தெழட்டும் புதிய
தலைமுறை !!
உலகமே உவந்து பார்க்கும்
இந்தியப் படங்களை
முதல் முறை !!

தமிழ்ப் படம்
அன்று ஏறும்
புகழென்னும் ரதம் !
காணும் சதம் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home