Friday, September 22, 2006

சினிமா - 06

வேறு
என்ன சொல்ல?
பாடல்களில் இருப்பது
சுவை அல்ல !
ஆயினும் என்னை
உறுத்துபவை
வருத்துபவை
இவை அல்ல !

பாரதி எழுதினான்
சாதிகள் இல்லையடி பாப்பா !
இற்றை நாள் கவிஞர்
போட்டனர் இக் கருத்துக்கு
தாழ்ப்பா(ள்) !!

"ஐயர் வந்து சொல்லும்
கீதையில் தான்
வார்த்தை வருமா ?"

"ஐயங்கார் வீட்டு அழகே "

"அவளுக்கென்ன
அம்பாசமுத்திரம் ஐயர்
ஹோட்டல் ஹல்வா மாதிரி "

இவற்றை அனுமதித்தது
தணிக்கைக் குழுவா?
அதன் தலையில் என்ன
புழுவா?

எழுத முடியுமா இவர்களால்
"ஷியா வீட்டு சாயாவே
என் பிள்ளைக்கு எப்போ
தாயாவே?
கொடு எனக்கு
right of way !
ஏங்குறேன் உனக்காக
night or day "!!
என்று?

அல்லது
"சுன்னி வீட்டு கன்னியே
வாசம் வீசும் வன்னியே
கண்ணாலே பேசிக் கொன்னியே
வறண்டு போச்சு மென்னியே
தெருக்கோடிக்கு வரச் சொன்னியே
நாளை என் தம்பிக்கு அண்ணியே"
என்று ?

எழுதின்
அனுப்பிடுவர் பரலோகம்
குண்டு போட்டுக்
கொன்று !
அல்லது
தின்று விடுவார்கள் இவர்கள்
முதுகெலும்பை
மென்று !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home