Wednesday, May 31, 2006

சென்னை - 07

எப் புரட்சி வர
இனி போகும்
லஞ்சம் ?!

ஒருத்தன் விடாது
ஒரு சேர அனைவர்க்கும்
அதனிடம் தஞ்சம்
நெஞ்சம் !!

நீ சிறிது சிந்தி
கொஞ்சம் !!

கொடிது இரத்தல்
அதனினும் கொடிது
கரத்தல்....
செய் அதனை
துரத்தல் !!

லஞ்சத்தை
ஒழி !!
வாங்குவோரை சக்கையாய்
பிழி !!
வாங்காதோரை மேடையேற்றி
அவர் தகையை
மொழி !!
பாராட்டைப்
பொழி !!
இவற்றிற்கு முதலில் போடு
பிள்ளையார்
சுழி !!

கையூட்டாய் வாங்கும்
பணத்தை
கிழி !!
கிடைக்கும் மக்களால் உனக்கு
பொற்
கிழி !!

பிறகென்ன?....
புகழில் கொழி !!
வையத்துள் வாழ்வாங்கு
வாழி !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home