Monday, May 22, 2006

சென்னை - 05

அதிகாரிகளைக் கேட்டால்
சொல்கிறார்கள்..

உனக்கு உண்டு
செல்வச் செழி !!
ஆகவே
சொத்தை வாகன
பராமரிப்புக்கு
அழி !!

அதுவும்
பயன் தராவிட்டால்
திருப்பதி சென்று
தலை முடி
மழி !!
கூடவே தாடை முடியும்
வழி !!
உயிரோடு இருக்க
"ஏடுகுண்டலவாடா" தான்
வழி !!

கோவிந்து! கோவிந்து! என
நாட்களைக்
கழி !!
தூக்காதே நாட்டைத்
தூக்கு என
கழி !!

ஊழி வந்து
ஆழி உறங்குபவன்
வந்தால் ஒழிய
நடக்காதது ஒன்று..

அதை நாம்
கேட்பது என்று ?
கேட்டால் நன்று !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home