Thursday, May 18, 2006

சென்னை - 04

அவர்கள் நம்பிக்கை
தும்பிக்கை !!
மாறும் காலம் எனும்
கடிகாரம் !!
அதுவரை ஓங்காரம்
நமஸ்காரம்
என வாழ்கின்றனர் !!
வேலையில் ஆழ்கின்றனர் !!

இவை தொடங்கக்
காரணம்...
பல இடங்களில்
குழி !!

கேட்டால்
பல துறைகள் மீது
பழி !!

மின் வாரியம்
இக் காரியம்
செய்தது என
தொலைபேசித் துறை
பறையும் !!

அவர்களைக் கேட்டால்
இது
பொதுப் பணி இலாகாவின்
வேலை என கன்னத்தில்
அறையும் !!

மொத்தத்தில்
நமது தொல்லை
என்று குறையும் ?!
எப்படி மறையும் ?!

ஆளுங்கட்சி
எதிர்க்கட்சி என
நாம் கேட்பது
இழி !!

மக்களுக்கு
போக்குவரத்து நெரிசலில்
பிதுங்கிறது விழி !
சிவக்கிறது முழி !!

புஸ் புஸ் என
பஸ்ஸில்
மக்களிடம் வியர்வை !!
மனதளவில் தேக்கியிருக்கின்றனர்
அயர்வை !!
நோக்கியிருக்கின்றனர் வாழ்வின்
உயர்வை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home