Monday, May 01, 2006

நிலம் - 23

பண மடி
தூரடி!
இறையடி ஒன்றே
நேரடி!

அவனை..
மனத்தே சேரடி !
பழ வினை தீரடி !!

காரணம்...
அவன் மருவில்லாத
உருவடி !!
மகேசன் அவன்
பேரடி !!
சைவம் போற்றும்
கொழுந்தடி !!
அவன் எரியும்
கொழுந்தடி !!
அவன் தலையில்
நீரடி !!
அவன் இருப்பது
நீறடி !!

அரியும் அரனும்
ஒன்றடி !!
அரியாய் வந்தவன்
அரியடி !!
அவனால் பிழைத்தது
கரியடி !!

அவன் தான்
அனைத்தும் என
அறியடி !!
துயர் முறியடி !!

அன்பில் அவன்
ஆறடி !!
போற்றினால் பெறலாம்
பேறடி !!
அவன் அன்பில் ஆழ்ந்து
பரமபதம் ஏறடி !!

நாம் மறக்கிறோம்
இச் சீரடி!!
தொழ மறுக்கிறோம்
தெய்வத் திருவடி !!

சிவன் சேவடியும்
செந்தூரன் காவடியும்
நினைவில் இருந்தால்...

இறை அருள் நிறைய
மன இருள் விரைய..

மனம்
ஆன்ம விசாரத்தில்
ஆனந்தக் கண்ணீர் வடியும் !!
வாழ்வு விடியும் !!

இவை வரின்...

ஓர் அடியில்
உறங்கி வரும் பிறப்பும்

ஆறடியில்
இறங்கும் இறப்பும்
அறலாம் !!

பெறர்க்கரிய பேறு
பெறலாம் !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home