Thursday, April 27, 2006

நிலம் - 22

காலையில் மண்ணை
காசு என்கிறோம் !!
சொத்தைப் பெருக்குகிறோம் !!

மாலையில் அதனை கால்
தூசு என்கிறோம் !!
"சொத்தை" என
பெருக்குகிறோம் !!

அனுதினம் நிலம்
மிதிபடுகிறது
நம் கால் அடியில் !!
அதனை நாம்
அளப்பதும் அடியில் !!
அதற்குச் சண்டை
முடிவதும் அடியில் !!

ஈரடியில் வந்த நாம்
பாரடி! பாரடி! என
பார்ப்போர் பேசவேண்டுமென
பறக்கிறோம் !!

காலடியில்
அருளாய் உதித்தவனும்
நாலடியில்
பொருளாய் பதித்தவனும்
சொல்வது..

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home