Thursday, April 27, 2006

நிலம் - 19

கடல் கொண்ட
பகுதிக்கு பெயர்
நெய்தல் !!
அதன் வேலை
காலையில் வெள்ளியாய்
மாலையில் கருநீலமாய் என
வேளைக்கு ஒன்றாய் ஆடை
நெய்தல் !!

இதனூடே
மேகத்துக்கு வயிறு நிரப்பச்
செய்தல் !!
மழை பெய்தல் !!
மழை இல்லையேல்
எங்ஙனம் நாம்
உய்தல் ?!

பூமியில்..
கடலின் விழுக்காடு
எழுபது !!
நிலம் கொண்டது மீந்த
முப்பது....

இந்த முப்பதுக்குள்...

என்ன சொல்ல !! -
நிறைய நடக்கிறது
தப்பதுக்குள் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home