Thursday, April 27, 2006

நிலம் - 21

நிலத்தை
பதிவு செய்கிறோம்
பத்திரம் பத்திரமாக...
பிறகு விழி
பிதுங்கி பாதுகாக்கிறோம்
மிக "பத்திரமாக" !!

கடல் நிலத்தின்
வரம்பு !!
காண முடியாது அவ்
வரம்பு தாண்டி
மரம் பூ !!

மனிதனின் ஆசைக்கு
ஏது வரம்பு?
ஆசையை வென்றது
எந்த உடம்பு?
அது தானே உண்டாக்குகிறது
சோகத் தழும்பு ?

அதற்கு
கணக்கே இல்லை !!
என்று இருந்தது
எல்லை?

வேலி மேல் வேலியாய்
வேலியோடு நிலம்
கேலி மேவ வாங்குகிறோம் !!
கடன் சுமையில் தூங்குகிறோம் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home