Thursday, April 20, 2006

நிலம் - 18

காரணம் அங்கவள்
எரியும் சுள்ளி !!
நிற்பாள் கால் வைப்பாரை
எள்ளி !!

கொஞ்ச முடியாது
அவளை கள்ளி! என்று
தூக்கி அள்ளி !!
ஏனெனில் அவளிடம் உண்டு
சப்பாத்திக் கள்ளி !!

மணல் சதா
எரியும் !!
கானல் நீர்
தெரியும் !!
மணற்காற்று திரியும் !!

ஆயினும்..
அம்மண் தரும்
எண்ணையில் எரிவதன்றோ
மண்ணெண்ணை
"திரியும்" ?!

மண்ணை தோண்டினால்
எண்ணை !!
அவ் எண்ணையன்றோ தருகிறது
அராபியருக்கு அனுதினம்
வெண்ணை ?!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home