Thursday, May 04, 2006

சென்னை - 01

தமிழின் சிகரம்
"ழ"கரம் !
தமிழ் நாட்டின் சிகரம்
சென்னை எனும்
நகரம் !!

என்னை
கருவாக்கியது அன்னை !!
உருவாக்கியது சென்னை !!

ஆகவே
என் அன்னை
அனையது எனக்கு
சென்னை !!

தந்திருக்கிறது பலருக்கு
பொன்னை
உன்னை என்னை
பின்னை நாளில்
ஆளாக்கிய அச்
சென்னை..

முன்னை நாளில்
அச் சென்னை
தன்னை
"மதறாஸ்" என்பர்
ஆங்கிலேய அன்பர் !!
அது அயல்மொழி என்பர்
தமிழாராய்ந்த வம்பர் !!

பன் மொழி வரினும்
என் மொழி
முன் மொழி
என பேசுவர் !!
இந்தித் திணிப்பை
ஏசுவர் !!

திணிப்போர் திருமுகத்தில்
திருச் சாணி
பூசுவர் !!
அவரோடு பேச
கூசுவர் !!
தமிழர் என்றால் சாமரம்
வீசுவர் !!

ஆக...
மதறாஸை சென்னை
ஆக்கியது தமிழ்
மொழி !!
அது என்றும்
கனி மொழி !!

கனிமொழியின் அண்ணன்
சாதா சென்னையை
"சிருங்காரச் சென்னை"
ஆக்கினார் !
அழகில்லா நகரம்
எனும் அவலத்தை
நீக்கினார் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home