Thursday, February 09, 2006

அம்மா - 21

சங்கதி நிறைந்த
சங்கரி வாழ்க்கை
சங்கதியும் நிறைந்தது !!

மன ரோகம் குறைந்ததும்
கன ராகம் நிறைந்தது!!
ஆதியும் ரூபகமும்
ஆகிருதியை அறைந்தது !!
ஆதியோடு துயர் மறைந்தது !!

சக்திக்கு காலையில் எரிசேரி !!
முக்திக்கு மாலையில் கச்சேரி !!

பல அரங்கில் கேட்டிருக்கிறோம் !!
ஏட்டோடு !! கை
நோட்டோடு !!

துட்டை பார்த்த பயல்கள்
துட்டை பார்க்கக் கூடாதென..

காலா காலத்தில்
கால் கட்டை போட்டாள் !!

நாட்டுப் பெண் மூவர் !!
மூவரும் புக்ககம் புகுந்த
பெட்டகங்கள் !! - எமது
ஈரம் பார்த்து வந்த
ஒட்டகங்கள் !!
இணையற்ற புத்தகங்கள் !!

ஒருவள் ஆதியில்
அனகாபரணனை
பதி கொண்ட குணவதி !!
இந்நாளில் நாராயணன்
கை பிடித்த யுவதி !!
உமா (எ) பார்வதி

ஒருவள் மதியான பெண் !!
கோமதி (எ) சுதா
ஜெயராமன் திருமதி !!
சதா சுதாவுக்கு தருகிறான்
அவன் வெகுமதி !

ஒருத்திக்கு தான்
பதிப் பெண்களிலேயே அதிக
மதிப்பெண் !!
செளம்யா (எ) சுபலட்சுமி !!

அவள் நற்குணங்களின் சங்கம் !!
புடம் போட்ட தங்கம் !!
கிடையாது கர்வ பங்கம் !!

மாண்டு கண்டு பிடிப்பதில்
மாண்டு போவர் பிறர்
இவள் முன் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home