Monday, January 23, 2006

அம்மா - 12

இளையவன் கணேசன்
சோழன்!!
தலை தாழன் !!
தாழின் வாழன் !!
வள வள வாயன் !!
பாடும் போது தூயன் !!
சாடும் போது பேயன் !!

மூவேந்தனில் இவன்
பாவேந்தன் !!
தமிழ் நா வேந்தன் !!
தமிழன்றி நாவில்
வேறொன்றை ஏந்தன் !!

வாலி தாசன் !!
குருவை தொழுது
இக்கவிதை தரும்
காளிதாசன் !!

ஊர் பெருங்களத்தூர் !!
அந்நாளில் பார்த்திருக்கிறது
அரசர்களின் அஞ்சா நெஞ்சம் !!
குடும்பத்து போருக்கா பஞ்சம்?

எமது போர்..
எவர் எழுதினார் இதை
வளவி?
ஆகவே இது
எழுதாக் கிளவி!

அரு கதை !! - உண்டு
அருகதை !!

குருஷேத்திரப் போர்
படிப்போர் பலர்
எம் வாசல் வழி
கடப்போர் !!
எம் குரல் கேட்போர் !!
பிரளயமா என
வானம் பார்ப்போர்!

எம் போரைப் பார்த்து
வாய் திறப்போர் !!
திறந்த வாய் மூட
மறப்போர் !!

செருப்பு, பருப்பு
தைத்த உடை
விதித்த தடை
கடிகாரம்
வெடி, காரம்
மூக்குப் பொடி
பல் பொடி
என்று அனைத்துக்கும் சண்டை !!
உருளும் மண்டை !!

பாதுகை பறக்கும் !
பஞ்சு மெத்தை கிழியும் !!
முன் பல் உடையும் !!
முட்டி தேயும் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home