Thursday, February 02, 2006

அம்மா - 18

கனமானது கணம் !!
ரணமானது மனம் !!
ரதமானது இனம் !!

தழலூதும் கை
குழலூதும் கையாக..
நார் பிடித்த கை
தேர் பிடிக்க...

சாரதியானாள் !!
பர்த்தாவை
பார்த்தன் ஆக்கினாள் !!

வெறுப்பை அறுக்கும்
பொறுப்பை ஏற்றாள் !!

ஈசான்ய மூலையில் உட்காராமல்
ஆசானாய் ஆனாள் !!

விசும்பலை மூட்டை கட்டினாள் !!
விசும்பை முட்ட கை நீட்டினாள் !!
அறிவைத் தீட்டினாள் !!

ஆதவன் பிரகாசிக்கும்
ஆகாயமாய் ஆனாள் !! - எமக்கு
ஆபத்சகாயமாய் ஆனாள் !!

முன் வழி காட்டும்
முன் மறி
வழி மாறியதால்
மந்தையில் மற்ற ஆடுகள்
தறி கெட்டு ஆடாமல்

நெறி கெட்டு போகாமல்
மானம் பறி போகாமல்....

மேய்க்கும் சேவையை
சேய்க்கு என ஏற்றாள் !!
காப்பாற்றினாள் !!

தன் நெஞ்சம் கலங்கலாம் !!
தன்னை தஞ்சம் என்றும்
தன் மடி மஞ்சம் என்றும்
கொஞ்ச வந்த
குஞ்சுகள் அஞ்சலாமா?
அதை பார்த்து என்
கண் துஞ்சலாமா?

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home