Thursday, January 26, 2006

அம்மா - 13

கொண்டை பிய்ந்து
சிண்டை பிடித்து அம்மா
காலை தோறும்
சாலை பார்த்து
மூலையில் உட்காருவாள்!!

தோலை உரிக்கிறேன்!
வாலை வெட்டுகிறேன் !
காலை கட்டுகிறேன் ! என
கால் நடையாய் எம்மை
பார்ப்பாள் !!
கோலை தேடுவாள் !!
சாடுவாள் !!

மூலையில் புலம்புவாள் !!
கண்ணீரில் கன்னத்தை
அலம்புவாள் !!

சண்டை சச்சரவு தான்
வாழ்க்கை !!
காலப் போக்கை அவை
மனதுள் பதிக்கின்றது !!
நெஞ்சம் பின் நாளில்
அதை நினைத்து
திதிக்கின்றது !!
திரும்பி வா என
துதிக்கின்றது !!

வாழ்க்கையில்
சண்டை பார்க்காத கை
பாழ் கை !!
சண்டை நேசிக்காத
மண்டை பார்க்கும்
சீக்கை !!

யுத்தத்துக்கு எண்ணம்
இருந்த வாழ்வில்
முத்தத்துக்கு கன்னம்
இருந்தது !! ஆதலின்
வண்ணம் மிகுந்தது !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home