Monday, February 06, 2006

அம்மா - 20

ராமப்ரியா
இவளை ஏத்தும் நாவால்..

இரு கரம் குவித்து
இது காறும் வந்திக்கிறது
இடை விடாது சிந்திக்கிறது
இரு சந்திரசேகரனை !!

ஒருவர்!
மன வைத்தியர் !
மற்றொருவர்
மகா பெரியவர் !!

ஒருவர்
மனம் முன்னேற உதவிய,
குழப்பத்தை அடக்கிய
லகான் !!
மற்றொருவர்
சனம் முன்னேற உதவிய
மாசற்ற மகான் !!

மன மருத்துவரும்
சன மருத்துவரும்
கலங்கரை விளக்கமாக
இல்லையேல்...

எமது நா வாய்
வறள..
ராமப்ரியா எனும்
நாவாய்
கலங்கி இருக்கும் !! எங்ஙனம்
துலங்கி இருக்கும்?

தனக் குழப்பம்
மனக் குழப்பம்
எல்லாம் இருப்பினும்
தனக்கு எனாமல்
தரணிக்கு என்று வாழ்வது
அம்மாவின் கணக்கு !!
அதில் என்றைக்கு இருந்தது
பிணக்கு?

அக்காள் பிள்ளைகள்
நாற்றான காலம் முதல்
அக்காள் காற்றான
காலம் வரை...

மாற்றார் இவர் எனாது
ஊற்றாக உறவுகளுக்கு
செய்திருக்கிறாள்
பல கூற்று!!
அதற்கு ஏது
கை மாற்று?

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home