Monday, February 06, 2006

அம்மா - 19

கொடிக்கு
குளிர் போயின்
துளிர்!!
குளிர் துளிர்க்கு வரின்
கொடிக்கன்றோ நீங்கும்
உயிர்?

ஓடக்காரன் செயலிழக்கலாம்
ஓடம் செயலிழந்தால் ?

நீடித்து நொடிக்கும்
மனநோயை
நொடிப் பொழுதும்
நம்பிக்கையால் ஒடித்தாள் !!
மன நோய்
மரண நோய் எனும்
அவநம்பிக்கையை பொடித்தாள் !!

விதைகள்
வீண் கதைகள் ஆகாமல்
விருட்சமாய் ஆக்கினாள் !!
உயர்வாக்கினாள் !!
துயர் போக்கினாள் !!

அப்பாவை
பீடித்திருந்த நோயும் நீடிக்கவில்லை
பீடி, பிராந்தி, வில்லைக்கு நாங்களும்
போகவில்லை !!

வீடு
அடமானம் போகும்
அவமானம் வாராது
அவள் அன்று காத்தது
அனைவரின்
தன்மானம்...
அதற்கு எது என்று ஆகும்
சன்மானம்?

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home