Monday, January 11, 2010

இருபது வருடங்கள். . . – 7


Picture Source: The Hindu, India's National Newspaper

நுனிப்புல் மேய்பவர்....
நுழைபுலம் ஆய்பவர்....

விழாவுக்கு விழா
விசிறி வருகிறார்
இரு பிரிவாக !!
அறிதல் அவசியம்
அவரை விரிவாக !!

வழக்கமான க்ருதிகளை
வகை வகையாய்ப் பாடி
வாங்கும் கை தட்டலா ?.

இதுவன்றோ பாடல்! என
இமை மூட மறந்த
இரசிகனிடம் பார்க்கும்
இரு கை கட்டலா ?!

எது தரம் ?
எப்புகழ் நிரந்தரம் ?

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
ஆரும் பாடா “ஒன்றை”
ஆணித்தரமாய் பாடுவீர் என
ஆவலாய் பலர்
ஆங்கே தேடிக் கொண்டிருக்க

”கண்ட நாள் முதலாய்”
கட்ட முடியுமோ அவரை
பாடிய க்ருதிகளையே நீவிர்
பாடிக் கொண்டிருக்க ?!

ஆகலாகாது இனி அவரது
அழகு கண்கள்
அழுது செய்ய !!
ஆரம்பியுங்கள் இனியாகிலும்
ஆனதைச் செய்ய !!

மற்றுமொரு குற்றச்சாட்டு
மக்களிடம் உண்டு !!
பாடுகின்றீராம் பல முறை
பாட நூல் கண்டு !!

சீறிக் கேட்கிறார் பலர்
”சீனியர் உங்களையும்
சிறையிடலாமா
சிறிய நூல்கண்டு ? “ !

சிந்தாமணி
சித்தரஞ்சனி
சிம்மவாஹினி
சுத்த சீமந்தினி

ஜகன்மோகினி
ஜயந்தஸ்ரீ
ஜயந்தசேனா

மணிரங்கு
மாஞ்சி
தேணுகா
தேவாம்ருதவர்ஷிணி
நாசிகாபூஷணி

கல்கடா
கமணாஸ்ரமா
குஜ்ஜரி
கெளட மல்ஹார்

சொன்னதும் நினைவுக்கு வரும்
சொற்ப கீதமன்றி
அவ்வளவாக பாடலில்லா
அழுத்தமான ராகங்கள் !!

புதுவரவினை அவற்றில் கேட்டு
புளகாங்கிதம் அடைய
விழைகின்றன தேகங்கள் !!

ஆரூர் பிறந்தாரன்றி
வேறூர் பிறந்தார்

பாயிரம் எடுத்து..
பாச் சுரம் தொடுத்து..

எதுவும் முடியவில்லை எனில்
எட்டுக் கட்டியாகிலும்
எடுத்துக் கொடுத்து..

பதவிசாய் தரும்
பக்குவத்தை
பல நாளாய் உங்களிடம்
பரவலாய் தேடும்
பலதரப்பட்ட மக்கள் மக்கில்லை !!

சுதாவை அப் பணிக்கு
சுற்றித் தேடா திக்கில்லை !!

ஏனைய கலாநிதிகளுக்கு
ஏனில்லை இந்த
ஏரார்ந்த பொறுப்பு ?
என வரலாம் மறுப்பு !!

”உன்னை நீ
உயர்த்திக் கொள்” !
உரைக்கிறது கீதை !!
உணர்வார் மேதை !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home