Wednesday, March 25, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 04

கறிகாய்க் கடையில்
காய்கறி “ஃபிரெஷ்”ஆ எனக்
கேட்கிறோம் !!
எவ்வளவு மதிப்பெண் என்பதற்கு
எவ்வளவு “மார்க்” என்கிறோம் ?

ஏதிலார் காலத்து
ஏகாதிபத்திய ஆதிக்கத்தில்
ஏற்பில்லாது நாம்
ஏற்ற மொழி

ஏரார்ந்த நம் மொழியூடே
ஏகமாய் இருக்கிறது ஊடுருவி !
புவி மணக்கும் நாற்றினிடை
புகலாமோ புல்லுருவி ?!

பிற மொழியினரான
பிரகாஷ் ராஜ் பேசுமளவு

நம்மவர் பேசுவதில்லை
நம் ”தொன்” மொழியை !!
நினைக்கும் போதே
நனைக்கிறது ஈரம்
என் கண் விழியை !!

அழுத்தம் திருத்தமாக
அழகுத் தமிழில்
அனேக வார்த்தையை பேச

மக்கள் அஞ்சுகின்றனரா ?!
மாற்று மொழியே
மகத்தான மொழியென்று
மதியிழந்து துஞ்சுகின்றனரா ?

பிறிதொருவரை பார்க்குங்கால்
“ஹாய்” என்கிறோம் !!
போய் வருங்கால்
“Bye” என்கிறோம் !!

வாய் நிறைய
வாசலில் வந்தாரை
வாரீர் என்றோ...
செல்வாரை
“சென்று வாரீர்” என்றோ...

நாவார பேசுவதில்லை நாம் !!
நம் மொழியை தாழ்த்துவதில்
நமக்கிணை நாம் தாம் !!

“ததோ யுத்தப் பரிஸ்ராந்தம்”
ஆனந்திக்க வைக்கிறது
ஆதித்ய ஹ்ருதயம் !!
அகிலத்தார்க்கு அது சொல்லும்
அழகான கதிரவனின் உதயம் !!

சமஸ்கிருதத்தில் "ஸ்லோகம்"
சலனமின்றி படிக்குங்கால்
சந்தேகமற தெளிவு பிறக்கிறது !!
சட்டென்று நா சிறக்கிறது !!

தமிழில் சொல்லுங்கால்
தமியேன் மனம்
தறிகெட்டு ஓடுகிறது !!
நா மட்டும் கடவுளின்
நாமத்தை பாடுகிறது !!

சிறிது நாள் முன்பிதனை
சிரித்துச் சொன்னாள் என்னிடம்
சிந்தியாது ஒரு தமிழ்ப் பெண் !!
சிவந்தது என் கண் !!

-- தொடரும். . .

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home