Monday, June 23, 2008

வீரத் தாய்...

32838522.PersianLeopard5

ஆலயத்தினும் சிறந்தவள் !!
ஆளப் பிறந்தவள் !!

பல வேளையில்
பற்பல வேலையில்

தன்னையே மறப்பவள் !!
தளர் வரினும்
தன் சுகத்தை
துச்சம் என துறப்பவள் !!

”காலத்தே கல்வி” என
கடைத்தேறும் வழியை
குடும்பத்திற்கு திறப்பவள் !!
சகம் தன் மகனை
சான்றோன் எனச் சாற்றுங்கால்
சந்தேகமின்றி உவப்பவள் !!

அவளே அன்னை !!
அவளன்றி
அகிலத்தார்
அறியக் கூடுமோ
அறநெறி தன்னை ?!

அத்தகைய ஒருவளால்
அபாரம்! அருமை! என
அரற்றுகிறேன் வியப்பெய்தி !!
தித்தித்து
திகைக்க வைத்தது இச் செய்தி !!

இதன் நாயகி
சேயின் துயர்
தாயின் துயர் என
ஏற்ற தாய் !!
இல்லை
இத் தேதியில்
இதை விட ஒன்று
இக் கவிதைக்கு ஏற்றதாய் !!

முறம் என்பது
முன்பு இருந்தது
முற்றத்தில் புடைக்க !!
சிறுகதையில் கேட்டிருக்கிறோம்
சிற்றூரில் ஒரு நாள்
சிறு நங்கை எடுத்தாளதனை
சிங்கத்தை புடைக்க !!

நிஜம் என
நிரூபித்து இருக்கிறாள்
இன்று இதனை
இந்த நங்கை !!
சாமானியமாய் நினைக்கலாகாது
சரித்திரம் படைத்த
இவள் பங்கை !!

இது நடந்த இடம்
இந்திய நேபாள எல்லை !!
இருளகலா அடவியானதால்
இதனுள் பூபாளம் இல்லை !!

இருண்ட கானகத்தில்
இருந்தது இரு பக்கமும்
இமயமாய் வளர்ந்த வேங்கை !!
இமை மூடு நேரத்தில்
இதற்குள்ளிருந்து வந்ததோ
இரத்த வெறி வேங்கை !!

African-Leopard2c-Samburu-National-Reserve2c-Kenya-847038

அது பாய்ந்து
அவள் பையனைக் கவ்வ..
அன்னையவள் பாய்ந்திருக்கிறாள்
அது மண்ணைக் கவ்வ..

போட்டது போட்டபடி ஓடாது...
புலம்பல் பாட்டு பாடாது...

தனக்கு வந்த சோதனையை
தனியாளாய் சமாளிக்க நேரிட..
துணிந்திருக்கிறாள் இவள்
துவளும் வரை போரிட !!

திரளான பலத்தை
திடுமென திரட்டியிருக்கிறாள் !
வழி மாறிய
வன விலங்கை
விழி தெறிக்க
விரட்டியிருக்கிறாள் !!

இதர விலங்குகள்
இதன் உணவை
இழுத்துச் செல்லாதிருக்க
இதனைப் பட்டினியில்
இம்சித்து கொல்லாதிருக்க..

இப் பிராணிக்கு
இயற்கை அளித்திருக்கிறது
இயல்பான ஒரு வரம் !!
இன்றைய தேதியில்
இது நிகழ்ந்திருப்பின்
இலங்கியிருக்கும் கலவரம் !!

இரையைப் புசிக்க
இதற்குத் தெரியும்
இலகுவாய் மரம் ஏறிட..
அது மட்டும் நடந்திருப்பின்
அகிலத்தாரால் முடியுமோ
அன்னையவள் முகத்தை ஏறிட ?

அதனை முறியடித்தது
அவளது கரம் !!
அதனையும் மிஞ்சியது
அவளின் நெஞ்சுரம் !!

இம்மியும் சந்தேகமின்றி
இதுவன்றோ தாய்ப்பாசம்?
இதர எதுவும்
இதன் முன் தலைக் கேசம் !!

இல் சிறக்க
இம்மையில்..
இருக்கிறாரோ ஒருவர்
இங்கே இனி தாயினும் ?
இந்நிகழ்ச்சி கேட்ட புவி
இதனை உணரட்டும்
இனிதாயினும் !!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home