Monday, June 16, 2008

நாடகம் என்பது....

cho as tughlaq

முத்தமிழின் மூன்றாவது
முகம் நாடகம் !!
முற்போக்கிற்கு
முக்காலத்தில்
முக்கியமானதாய்
முன் நிறுத்தப்பட்ட ஊடகம் !!

சுதந்திர தாகம்
தேச ஒற்றுமை என
அந்நியனை அகற்ற
அனேக கருத்துக்கள்

ஆங்கிலேய
ஆதிக்கமிருந்த
ஆதி நாளில்
ஆக்கிரமித்தன !!
ஆண்டாண்டு காலம்
ஆனந்தித்து சனம் இவற்றை
ஆர்ப்பரித்தன !!

இதிகாசம்
இலக்கியம்
வரலாறு
வாழ்வியல்
பகுத்தறிவு
பழமைச் சீர்திருத்தம்
சிந்திக்கத் தூண்டும்
சிரிப்பு என

காலத்தே அதன் போக்கு
மாறியது !!
தினம் ஒரு வகையில்
தினுசு தினுசாக நாடகம்
மேடை ஏறியது !!

மேடைக்கு இழுத்தது அது
ரோமானியனையும் !!
விட்டு வைக்குமா அது
சாமானியனையும் ?!

காலையில் இருப்பார்
பாட்டரசர் புரந்தர தாசர் !!
மாலையில் இருப்பார்
நாட்டரசர் ஜூலியஸ் சீசர் !!

கலைவாணர்
கே.பி
ஆர். எஸ் மனோகர்
பூர்ணம்
மெளலி
மேஜர்
...
...

இவர்களின்
இணையற்ற நடிப்பால்
இத்துறை

பண்டை நாளில்
பல வகையில்
பரிமளித்தது !!
பங்கு பெற்றாரது
பங்கினை ஒத்து
பல்சுவையை பார்ப்பாருக்கு
பரிசளித்தது !!

நானறிந்த வரையில்
நாடு போற்றும் பல
நடிகர் இயக்குனருக்கு
நாடகமே அத்திவாரம் !!
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இன்றளவும் காணலாம்
இவர்தம் பரிவாரம் !!

ஆயினும் கண்டது
ஒரு குறை
அத் துறை

அரசியல் என்பது
ஆண்டாண்டு காலம்
அமைந்திருக்கிறது இந்தியாவில்
அவல நிலையில் !!
அலசவில்லை
அதனை எவரும்
அக்கு அக்காக
நாடகக் கலையில் !!

அதனையும் மாற்ற
ஒருவர் எண்ணினார் !!
முண்டக் கண்ணினார் !!

அரசியல் அமைப்புச் சட்டம்
அதிகம் படித்தவர் !!
அரசியலை அன்றாடம்
கரைத்துக் குடித்தவர் !!

சிறிது காலம் திரையில்
சிறிய கதாபாத்திரங்களில்
நடித்தவர் !!
எழுத்துலகில் ”துக்ளக்” என
எழுதுகோலைப் பிடித்தவர் !!

இருக்காது
இவர் எழுத்தில்
ஆளாக் கட்சி
ஆளும் கட்சி என
ஆதாயம் பார்க்கும் பாரபட்சம் !!
பயம் என்பது அவர்க்கு
இரண்டாம் பட்சம் !!

அரசியலை கிண்டலடிக்கும்
அரங்க நாடகத்தில்
அமைதியாய் கீதையின்
அறக் கோட்பாடுகள்
அங்கங்கே சொலிக்கும் !!
இந்து மதத்தை
இழிவு செய்வாரை
இலை மறையாய் அது
இகழ்ந்து ஒலிக்கும் !!

இன்று வந்தாலும்
இந்நாட்டை ஆளலாம்
துக்ளக் எனும் முகமது !!
இந்திய அரசியலின்
இன்றைய
இழுக்கான முகமது !!

என..

1968ல் எழுதிய நாடகம்
நாற்பதாண்டுக்குப் பின்னும்
நன்கு பொருந்துகிறது !!
நம் நாடு என்று
நல் வழியில் திருந்துகிறது ?
என் மனம் வருந்துகிறது !!

ஒன்று கூறிட துடிக்கிறேன்
அதனோடு இதனை முடிக்கிறேன்

மனுநீதியோ
மனு நீட்டிய பின் நீதியோ

தேர்ச் சக்கரமோ
தேர்தல் சக்கரமோ

அறம் தழைக்க
அரசுக்குத் தேவை மணி !!
அதனை ஒலிப்பதுவே
அன்பர் நம்மவர்
அமைத்துக் கொண்ட பணி !!

விசாரணைக்கு
விவகாரத்தை
விவரித்தல்

மாடைப் போல் இழுத்தா ?
மாற்றப் போகும் எழுத்தா ?

இதில் இரண்டாவது
இவர் எடுத்த கருவி !
அதனாலன்றோ
அரசியல் குதர்க்கத்தை
அதட்டிக் கேட்கிறார்
தோண்டித் துருவி ?!

தைரியமாய்..
வைரியமாய்...

நீதியை துதிக்காதோரை
சட்டத்தை மதிக்காதோரை

எங்கு காணினும்
எவர் கோணினும்...

தவறைச் சுட்டி
தலையில் குட்டி..

தனித்து நிற்பவர்
திகைக்க வைப்பவர்

சோ ராமஸ்வாமி
எனும் சோ. ரா !!
எழுத்துலகில் அவரது பணி
என்றும் சோரா !!

Labels: , , , , ,

1 Comments:

At 6/19/2008 10:06 AM , Blogger Vijay said...

திரு கணேஷ் வெங்கிட்டு, உங்கள் கவிதைகள் படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யம்.
Hats off to you Sir.

அன்புடன்,
விஜய்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home