Thursday, April 17, 2008

மீரா ஹெர்பல்....

வெள்ளி..
கிழமைக்கு உண்டொரு
பழமை..

அப் பழமையுள்
ஒன்றியது
பெண்மை..

"சிக்காக" இல்லாது
சிக்காக இருக்கும்
கூந்தல்..
எண்ணெய் படிந்து
அதனை
அள்ளி முடிந்து..

காளையர் காண
கன்னியர் சூழ

நதி தீரம் சென்று
நெடு நேரம் நின்று

மாராப்பை மறைத்து
மச்சானின் வீராப்பை
உரைத்து

ஆற அமர
அளக பாரம் அலசி
பேசிடுவர் பெண்டிர்
பெருங் கதை !!
பேச முடியாது
ஒரு கவிதையுள்
இதை !!

இன்றோ..
காவிரியில்
நீர் இல்லை !!
எனவே அங்கு
நீ இல்லை !!

கூடவே காலமும் மாற..
சமுதாயத்துள் உன்
நிலை ஏற..

சிறு மஞ்சளும்
செம்பருத்தியும்
சீயக்காயும்
சேர்க்க
ஆகிறது நேரம்..
ஆனது உனக்கு அது
தூரம்...
இருந்தும் தேவைப்படுகிறது
வெள்ளி தோறும்
தலைக்கு ஈரம் !!

தேகத்தில் கூடுகிறது
வேகம் !!
இருப்பினும்
இறங்கவில்லை
இளங்காலை பருவத்து
மோகம்...

33க்கு
போராடும் பெண்ணே!!
போராடு !!
மீரா ஹெர்பல் கொண்டு
நீராடு பெண்ணே
நீராடு !!

Unauthorized copying/distribution/reproduction of this poem is strictly prohibited.
This was jointly developed by Sankari Venkittu and Ganesh Venkittu
who reserve all ownership rights

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home