Monday, April 14, 2008

காவிரி....

ஏற்படுத்தியிருக்கிறது
ஏக பரபரப்புடன்
ஏமாற்றம் கூட்டும்
சிக்கல்
ஹோகேனக்கல்

தண்ணீரை
தன் நீராய்
கர்நாடகம் பார்க்க...
முயற்சித்தும்
முடியவில்லை
முனைவோரால்
இப் பிரச்சினை
தீர்க்க...

அத் தண்ணீரின் மூலம்
தலைக் காவிரி !!
தமிழகமோ தண்ணீரின்றி
தலை விரி !!

உழவனுக்கு இதனால்
காயம் !!
ஆயினும் பூசப்பட்டிருக்கிறது
அரசியல் சாயம் !!

தேவை மக்கள்
நலன்
பேசிப் பேசி என்ன
பலன்?..

என..
இடது சாரி
உருக..
இதனூடே
மானாவாரி
கருக...

வாடுகிறான்
கிராம வாசி !
ஏறுகிறது
விலை வாசி !!

தொன்று தொட்டு
தமிழகத்திற்கு
தண்ணீர் பிரச்சினை
தருகிறது விக்கல்
விட்டு விட்டு !
அரசியல் கட்சிகள்
அனுகூலத்தை
ஆராய வேண்டும்
ஆதாயத்தை
விட்டுவிட்டு !!

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home