Friday, May 11, 2007

Walmart - 02

கல கலப்பாய் இருக்கும்
அவ் வீதியில்..
ஒரு பாதியில்...

4 ரூபாயா ஒரு
முழம்?
40 பைசாவா ஒரு
பழம்?

இது ஒரு
கீரையா?
நீ எந்த
ஊரையா?

"சொல்லிக் கொடு"
விலையை !!
மறவாதே "கொசுறாக"
கறிவேப்பிலை இலையை !!

என
கடை தோறும்
தினந்தோறும்

நடக்கும் பேரம்
ரொம்ப நேரம் !!

பிடிக்காத வேலையில்
நாள் முழுதும்
உறங்கி
மாலை 6:30 மணிக்கு
ரயில் வண்டியிலிருந்து
இறங்கி

இக் காட்சியை
இச் சலசலப்பை
இப் பரபரப்பை
பார்த்தால்

மனம்
சலிப்பை மறக்கும் !
சுமையை இறக்கும் !
இறங்கிய சுமை
தானாகவே
இறக்கும் !!

விற்பனையாளன்
வாடிக்கையாளன்
ஒவ்வொரு முகமும்
காட்டும் ஒரு
ரசத்தை !!
அக் காட்சியில்
இதயம் இழக்கும்
வசத்தை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home