Monday, February 19, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 01

தேடி வந்திருக்கிறது
வெற்றி
தமிழனின் சாகை !!
தந்திருக்கிறது அவனுக்கு
ஒன்றுக்கு ஒன்பதாக
தங்கப் பாகை !!

ஆம்..
வந்திருக்கிறது தமிழகத்துக்கு
பத்மஸ்ரீ விருது
திரண்டு !
அதில் குறிப்பிடத்தக்கது
இரண்டு !!

அரிய
அதன் பெருமை
அறிய

பின்னோக்கி சிறிது
செல்வோம்
பழங்கதை ஒன்று
சொல்வோம்..

திரையுலகு கட்டுண்டு
கிடந்தது
ஆதி நாளில்
கவியரசராம்
கண்ணதாசனின்
கவிதைத் தாளில்

இதர பாடல்களை
எற்றி
அவரது பாடல்கள்
பெற்றன பெரும்
வெற்றி

இன்னதென்று அறியா
இன்பத்தில்
பித்துப் பிடித்தது
தமிழனின் பிச்சி !!
பரபரவென போனார்
கண்ணதாசன்
புகழின் உச்சி !!

தமிழர் நெஞ்சில்
கவியரசர்
நாற்காலியிட்டு உறைந்தார்
நெடுநாள் நிறைந்தார்

திடுமென
கண்ணதாசன் ஒருநாள்
மறைந்தார் !
மக்களை மாளாத் துயரத்தால்
அறைந்தார் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home