Sunday, February 25, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 02

மக்களுக்கு
பாடல்களின் எளிமை குறித்து
பற்றியது பயம்
முழுதும் இழந்தனர்
சுயம்

இனி கவிஞர் வாய்
வாய்க்கு வந்ததை உமிழும்
உய்யுமா இனி
தமிழும் ?
மனம் மறுமுறை
என்று அதில்
அமிழும்?

என..
கண்ணீரை சிந்தினர்
மூலையில் குந்தினர்

அச் சமயத்தில்
அகிலத்தையே இழுத்தது
ஒருவரது வரிகள் !!
காலப்போக்கில் விழுந்தோடினர்
அவர்முன்
மேகத்தையும் தாகத்தையும்
எழுதும் தற்குறிகள் !!

கண்ணதாசன் காலத்திலும்
இவரது பாடல்
இருந்தது !!
அரசியல் சார்ந்தோர்க்கு
விருந்தது !!

இருவரும் இரு
கோட்டி
இருந்தது இருவர்க்கிடை
கடும் போட்டி

இதற்கு இடையில்
தனது நடையில்

தனக்கென ஒரு
பாணி வகுத்து
அதன் வீச்சு தெரியுமாறு
கவிதை தொகுத்து

காட்டினார் பெரும்
உழைப்பு !!
அதற்குக் கிடைத்திருக்கிறது
அரசினின்று இன்று
அழைப்பு !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home