Friday, March 24, 2006

நிலம் - 02

பேசுகிறான் வாலிதாசன்
கவிதை புனைந்து !!
தமிழ் மழையில்
சிறிது நனைந்து !!

போவீர் அதில்
சிறிது புதைந்து !!
போனால் போகமாட்டீர்
புத்தி சிதைந்து !!

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி என
இலக்கணம் ஐந்து !!

நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வெளி என
பூதம் ஐந்து !!

வெண்பா
கலிப்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
மருட்பா என
பா ஐந்து !!

ஆண்பால்
பெண்பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால் என
பால் ஐந்து !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home