Friday, March 24, 2006

நிலம் - 01

சமஸ்கிருதத்தில்
ஐந்துக்கு "பஞ்சம்" !!
தமிழில் ஐந்துக்கா
பஞ்சம் ?!

ஆம்...
தமிழில் உண்டு
பல ஐந்து !!
அதனால் அது போகவில்லை
நைந்து !!

உயிரும் மெய்யும்
சேரும் இழைந்து !!
உருவாகும் உயர் சொல்லால்
தமிழ் கொஞ்சும்
குழைந்து !!

ஆகவே
எம்மொழி முன்னும்
ஆகவில்லை தமிழ்
தலை தழைந்து !!

சொல்ல வந்தேன்
தமிழ் அழகை
கொஞ்சம் விழைந்து !!
சிந்தனை கிடக்கட்டும்
சிறிது அதனுள் நுழைந்து !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home