Tuesday, March 31, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 06

..
..
”ஆங்கிலம் உமக்கு
அறவே வாராதோ” என
அனேகருக்கு உண்டு நினைப்பு !!
அந்த அளவு அவருக்கு
அம்மொழியோடு பிணைப்பு !!

கேட்க கன்னடம் போல் இருக்கும் !!
கேட்கக் கேட்க காது இனிக்கும் !!

அது துளு மொழி !!
அந்தோ!
அறிய முடியாது
அவனி அதனை
எழுதிய வரி வழி !!

அன்பர்களே!
அம்மொழிக்கு எழுத்து வடிவம்
அறவே இல்லை !!
வாய் வார்த்தையின்றி
வையம் அறிய முடியாது
வடிவான அதன் சொல்லை !!

ஏற்றுவாரின்றி அழிந்ததா?
எழுதுவாரின்றி ஒழிந்ததா?

நம்மொழியும் அவ்வழி போகுமா ?
நமக்கே அன்னியமாய் ஆகுமா ?

அடுத்த முறை தேவையின்றி
அன்னிய மொழி பேசுங்கால்
அக் கேள்வியால்

உரக்கக் கேளுங்கள்
உன்னதமான தமிழை
உதாசீனப்படுத்துவார் தம்மை !!
உறைக்கட்டும் அவர்க்கு
உயர்ந்த நம்மொழியின் செம்மை !!

“அங்கன யாரும் சொல்லுதியா?
இங்கன ஒரு பய சொல்ல மாட்டேங்கான்”

“ரமணா”வில் வரும்
ரம்மியமான இவ்வசனம்

பலரை வசீகரித்தது !!
புகழை சேகரித்தது !!

வட்டாரத் தமிழின்
வற்றாச் சுவையுடைய
வசனத்தால் நெகிழ்ந்தார்
வலிய உரைப்பர்

”நெடு நாள் கடந்தும்
நெல்லைத் தமிழ் கேட்குங்கால்
நெஞ்சு நிறையுதென்று” !!

அறிவரோ அவர்
அத்தகைய தமிழ்
ஆங்காங்கே மறையுதென்று ?

”எத் திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழ் அணங்கே”....
இருக்கின்றாயா
இன்னமும் நீ இங்கே ??
தமிழர் உன்னை
தமிழ்த் தாய் வாழ்த்தன்றி
இனி காண்பது எங்கே ??

-- தொடரும். . .

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home