Monday, February 20, 2006

கடல் - 06

வாதையின் பிள்ளை
சீதையை பார்க்க
தாவியதும் கடல்...

சோதையின் பிள்ளை
வாய் திறந்து
காட்டியதும் கடல்..

மொத்தத்தில்
பரமபதம் அளிப்பவனும்
பாசுபதம் அளித்தவனும்
பிரணவ பதம் உரைத்தவனும்
உடல் கிடத்தியிருப்பது
கடல் !!

கடல்
நம் சமயத்தின் அம்சம் !
சமயத்தில் பண்ணும்
துவம்சம் !!

அறிவியல் சொல்லும்
அதில் தொடங்கியது தான்
அனைத்து உயிர்களின்
வம்சம் !!

திண்ணம் நழுவி
பெண்ணைத் தழுவி
முத்தமிடும்
முறைகேடான மானுடர் தம்
எண்ணம் நீலம்..

மண்ணைத் தழுவி
முறையாக
முத்தமிடும் கடல்
வண்ணம் நீலம்...

ஒரு அஞ்சை
அடக்காமல் நாம்
தவிக்கிறோம்
கடல் "ஆறையும்"
அடக்குகிறது...

மனிதன் கற்க
வேண்டியது நிறைய
அலையிடம் !!
ஏனெனில் அது
கலை இடம் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home