Monday, February 20, 2006

கடல் - 05

jpg0044

கடல்..
பூமி சுற்றியிருக்கும்
சீலை !!
பாலைக்கு
ஊற்றும் பாலை !!
மேகத்தின் வயிறு
நிரப்புவதே
அதன் வேலை !!

மறுவில்லாத
ஒரு வில்லோடு வந்த
பேறு தரும் அரசு
வீற்றிருப்பது
பேருவில்....

ஆம்..
வரை வாழ் மாலுக்கும்
நுரை சூழ் பாற்கடல் எனும்
பால் ஆழி
உறைவிடம்..

தரை வாழ் காலுக்கும்
கரை சூழ் கடல்
அரை நாழி
ஓய்விடம்

இறைக்கு
மறைப் பொருள்
நிறைவாக உரைத்தவன்
உறைவதும்
கடல் அருகில்...

கண்
இமைக்கு முன்
உமைக்கு
உடலில் சரி பாகம்
குறைவின்றி கொடுத்தவன்
உறைவதும்
கடல் அருகில்...

அவன் சிகப்பன் !!
இவன் அவன் தகப்பன் !!
தக தகப்பன் !!
நெருப்பன் !!

அவன் கந்தன் !!
இவன் அவனை தந்தன் !!
இவன் கண் தோன்றி அவன்
வந்தன் !!

அவன்
தோகை ஏறும்
வள்ளி நாயகன் !!
இவன்
கூகை மேவும்
சுள்ளி நாயகன் !!
கொள்ளி நாயகன் !!

மேற்சொன்னோர்க்கு
செந்தூர்
நாகையில் தான்
ஜாகை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home