Monday, January 09, 2006

அம்மா - 3

சங்கரி நாமம் !
சங்கரி நாமமல்ல !!
சைவம் !!

சனித்த நாள் முதல்
காலையில்-
வெம்பு கரிக்கு ஆயிரம்
மாலையில்-
சம்பு ஹரிக்கு பாயிரம்
என
சங்கரிக்கு வாழ்க்கை !
நுழைத்ததில்லை யார்
வாழ்க்கையிலும் மூக்கை !!

தமிழிலும் தமிழிசையிலும்
நா நாளும் அமிழும்
சுரமாய் உமிழும்

பாடியிருக்கிறாள்
பல வயலினோடு
பல கயலினோடு

மிகையில்லை ! - பல
வகை வாத்தியத்தோடு
வாசித்த சில
புகைப்படம் இருக்கிறது

பாமாலையில் பூமாலை
போடுவாள் !
குருதியை சுருதியாக்கி
பாடுவாள் !
கதி கருதி உமா
பதியை தேடுவாள் !

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home