Friday, January 13, 2006

அம்மா - 5

தா! தா! என
தாத்தா
திருடனை துரத்தியிருக்கிறார் !!

ஜெயராமன் தாத்தா
அயராது கட்டிய வீடு !
அவர்க்கு இல்லை ஈடு !!

ராமப்ரியாவில் அவர்..

கேட்டும் இருக்கிறார்
பண்ணை !
போட்டும் இருக்கிறார்
பண்ணை !!

அவர் பண்ணையில்
நட்டது தென்னை மரம் !!
விட்டது வியர்வையெனும் உரம் !!

தென்னம் பிள்ளைக்கு
கெல்லிக் கொடுத்தார்
மண்ணை!
பேரப் பிள்ளைக்கு
சொல்லிக் கொடுத்தார்
எண்ணை !

உருவில் அவர்
குட்டை !
கணக்கில் தப்பு செய்வோர்க்கு
கொடுப்பார்
குட்டை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home