Tuesday, January 10, 2006

அம்மா - 4

கொடுத்தாள்
வெங்குட்டுவுக்கு கரம்
தொடங்கியது இல்லறம் !

அவர் ஆறடி
இவள் வருவாள்
அவர் மார் அடி !!

அவர் -
கெளசிக கோத்திரம்
உண்டு தேவையான
ஆத்திரம் !
தெரியாது சாத்திரம் !!

உபவீத நாதம்
சாம வேதம் !
பண்ண மாட்டார் வேண்டா
வாக்கு வாதம்
தேவை வேளைக்கு
சாதம் !

தெரியும் சில கீதம் !
சுருதி பேதம் !
பாதம் கொண்டு
நடப்பார்
நிறைய காதம் !!

ராமப்ரியா !
ராகத்தின் பெயரில் அகம் !
அம்மாவின் சகம் !!

அச் சகம்
அனுதினம் ஒரு அனுபவம்
பதிப்பிக்கும்
அச்சகம் !!

பார்த்திருக்கிறது
உலகம் பாராத வண்ணம்
உலகம் பாராத
பல கலகம் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home