Monday, January 16, 2006

அம்மா - 7

அவர் கை அடி பட்டு
அடியேன் கன்னம் வீங்கியதில்லை !
கால் அடி தொட்டு
ஆசீர்வாதமும் வாங்கியதில்லை !!

வீங்காததை நினைத்து
ஏங்காத நாளில்லை !
வாங்காததை நினைத்து துயரம்
தாங்காத நாளில்லை !!

பேரன் என் மீது அன்பு
பேரன்பு !!

கடுதாசி எழுதினார்
பேரனை
நோய் நொடியிலிருந்தும்
நாய்க் கடியிலிருந்தும்
காப்பாற்றுவீர் என்று !!

அது தான் அக்
கருணைக் கடல் எழுதிய
கடைசி மடல் !!
அதன் பின்னன்றோ
உயிர் நீத்தது அவர்
உடல்?!!

அவரை பயரிட்ட
அவரை
எவரை ஒப்பிட்டு
ஏத்த இயலும்?
முயலும் எவ் இயலும்
அயலும் !!

நித்யசூரியாய்
வீற்றிருக்கிறார் புகைப்படத்தில்
நெற்றிக்குத் தான் பொட்டு !!

வணங்கி கும்பிட்டு
இன்றுவரை வாங்குகிறோம்
கணக்கில் பெருங் கை தட்டு !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home