Thursday, January 05, 2006

அம்மா - 2

2005_11_16_jpg0002

பணம் தனம்
இல்லாக் குடும்பத்துக்கும்
ஆத்தா தான் ஆத்தி !!
இன மரங்களிலேயே
இலை வரை
மணக்கும் ஆத்தி !

அம்மா!
மன இருள் அகற்றும் தெய்வம்
மனிதருள் தோன்றும்
கால் ஊன்றும்
என்பதற்கு சான்று !

களக்காடு
பூக்காடு கொள்ள
ஆற்காடு ஏற்காடு
கூட்டிச் செல்ல
கொண்டல் வந்தது !
தென்றல் தந்தது !!

புரியவில்லையா?
தெரியவில்லையா?

ஆற்காடு ஜெயராமன் தாத்தாவுக்கும்
களக்காடு ஜானகி பாட்டிக்கும்
இரண்டாம் கிள்ளை!
இவளுக்கு இணை இல்லை !!

என்னவள் தென்னவள் !
ஜெயா பெரியம்மாவுக்கு
சின்னவள் !

ஆயில்ய நட்சத்திரத்தில்
உதித்தாள் !
ஆலயமாய் குவலயத்தில்
கால் பதித்தாள் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home