Tuesday, November 07, 2006

கொலு - 01

Kolu_2006_09_30_jpg0005

இக் கவிதையில் உண்டு
நடைமுறை வாழ்வில்
நாம் காணும்
வசனம் !!
இலக்கணப் பிழை
இந்து மதம் தாக்கல்
என வேண்டாம்
விசனம் !!

தென்னிந்தியாவின்
தனித்துவம் மிக்க பண்டிகை
தசரா !
அப் பத்து நாளும்
எப் பெண்ணின் கண்ணும்
அசரா !!

பத்து நாள்
விழா !
வீடுதோறும்
மங்கல ஒலியன்றி
வேறு ஓசை
எழா !!

பாய் விரித்த அகம் !
புன்னகை தரித்த
முகம் !
பார்த்தாலே சுகம் !

மண், மரம்,
பீங்கான், பித்தளை
வெள்ளி, வெங்கலம்
என
கண் கவர் பொம்மை
பல வகையில் !
தனவந்தர் வீடுகளில்
தந்தமும் இருக்கும்
மிகை இல் !!

அவை உருவானதோ
பல கையில் !
ஒன்றானதோ
பலகையில் !!

-- தொடரும்

1 Comments:

At 11/07/2006 2:25 PM , Anonymous Anonymous said...

Hi Ganesh,
Nice poem, I liked the last line "uruvanatho pala kayil, onranatho palagayil". All you 3 brothers have lot of creativity!

Vichu.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home