Thursday, March 09, 2006

பட்டம் - 03

P1243314

பட்டமோ
நூலோ வாங்க
தாண்ட வேண்டும்
தண்டவாளம் !!
அம்மா போடுவாள்
கடிவாளம் !!

விட மாட்டேன் உன்னை !!
விட்டால் பிறகு நான்
என்ன அன்னை ?!

புகை கக்கும் வண்டி
மனத் திரையில்
படப் பட
அடிக்கிறது மனம்
பட பட !!

எங்கேனும் போய்
நீ தொலைந்தால்
இடம் தெரியாது
அலைந்தால்..

எங்கென்று போய்
நான் தேட?
ஆகவே தான் கேட்கிறேன்
எவர் வருகிறார்
உன் கூட ?

வந்தால் நட !
தண்டவாளம் கட !!
வராவிட்டால் பேசாமல்
கிட !!

மனம் அவள் பேச்சை
மறுக்கும் !
அந்த அளவு
ஏறிக் கிடக்கும்
கிறுக்கும் !!

சமாளித்து சமாளித்து
நடப்போம் நாங்கள் மணவாளன்
கடைக்கு !!
அப்பாவும் அங்கு போவார்
சுக்குக் காபி,
வடைக்கு !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home