Monday, February 27, 2006

கடல் - 09

நிறத்தில் சாம்பல் காண்பீர்
திறத்தில் சோம்பல் காண்பீரோ?

அலை..
விழுந்ததை நினைத்து
மறுங்குவதில்லை
சுருள்வதை நினைத்து
சுருங்குவதில்லை
நொறுங்குவதில்லை

தேவையற்றவையை அருந்துவதில்லை
தினையளவும் வருந்துவதில்லை

பலமுறை விழுந்த போதும்
அலையில்
புண் இல் !!
காரணம் அது விழுவது
திரண்டு புரண்டு மண்ணில் !!
பிறகு இரண்டு கண்ணில் !!

அலைக்கு...
எழுந்ததை நினைத்து
செருக்கு இல்லை
தருக்கு இல்லை

ஆஹா...
அதன் திறமையை முடிய
ஒரு சுருக்கு இல்லை

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home