Friday, December 30, 2005

TVR - 11

sowmya sarvesh in outerbanks

கை பிடித்தானோடு
பெண்கள் செல்ல
கை பிடித்தாளோடு
மாமா மாமி மட்டும்..

வீடு இன்று காலி !!
படிக்கிறார் மாமா
நாற்காலியில்
ஆற அமர வாலி !!

வீடு கிட்ட
ஆள், அரவு, வீடு விட்டு
உறவு விட்டு
துறவு கேட்கப் போகிறேன் என்பார் !!

அன்பு அவரை தடுக்கிறது !
பேரன் "பின் லேடன்" மூலம்
படாத பாடு படுத்துகிறது !!

வாழ்கிறார்
தங்கை தம்பி சூழ
நங்கை நல்லூரில் !!

மாமா மாமியிடம் நான் படித்த
மிகப் பெரிய பாடம்....

சொத்து என்பது
முத்தாய் வரும் !
கொத்தாய் வரும் !

வந்த வேகத்தில் போகும் !
மனம் மேலும் மேலும் என ஏங்கும் !!

நெடி துயில் தூங்கும் நாள்..
சடலம் ஆவியில் வேகும் நாள்..
உடலை யார் தூக்குவார்?
பணமா? முன் சேர்த்த
குணமா?

இனமும்..
இழந்த தானமும்..
இழக்காத மானமும்...
இவை அன்றோ
இறவாப் புகழ் நல்கிறது?
இன்றளவும் இவ்வையம்
இதைத்தானே சொல்கிறது?

வாழ்வுக்கு
வித்தாய்
சத்தாய்
சம்பத்தாய்
உறவன்றோ வருகிறது?!
உயர்வு உனக்கு தருகிறது?!

இவை அமைந்தால் எதற்கு
பதவி? சேர்?
ஆகவே இவற்றைச் சேர் !!
அமைந்த பிறகு
அமர பதவி சேர் !!

சொல்லாமல் சொன்னார் இப் பாடம் !!
ஆக்கி வருகிறேன் இதனை மனப்பாடம் !!

வாழ்வார் என் மாமா பல்லாண்டு !
விரைவில் உண்டு எல்லோருக்கும்
கற்கண்டு !!

சஷ்டி முருகனை வணங்குபவருக்கு
சஷ்டியப்தபூர்த்தி வருகிறது !!
முஷ்டி தட்டி
வேஷ்டி சேலை கொடுத்து
புஷ்டியாக கொண்டாடுவோம் !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home