Thursday, December 22, 2005

TVR - 5



பதவியில் இரும்பானவர் !
உதவியில் கரும்பானவர் !!

வாரியாராய் குலுங்க குலுங்க
சிரிப்பார் !!
வாரீர், வாரீர் என வாய் நிறைய
வரவேற்பார் !!

நான் பேசாதிருந்தால் ஏங்கிடுவார் !!
நான் பேசினாலோ சட்டென
தூங்கிடுவார் !!

சிறு வயதில் பல்லிழந்தார் !!
சிறு சொல் என்றிழந்தார்?

புயலா?
புதையலா? - ஆச்சர்யத்தோடு
தையல் எடுத்தார்
பாலாமடையில் !!
ஆசாரத்தோடு தாலி கட்டினார்
மணமேடையில் !!

சாரதா..
அவள் நாம கரணம் !
அவள் செயல் திறனுக்கு
போடலாம் பல
தோப்புக் கரணம் !!

எனக்கு என்றும்
செல்லமாய்
வெல்லமாய்
வடம்ஸ் மாமி !
சினந்தாலோ அவளொரு
சுனாமி !!

மாதாவும் சாரதா !!
சாதா விஷயத்துக்கெல்லாம் சதா
கோதாவில் இறங்கி
பாதாம் அல்வா தரும்
மனையாளும் சாரதா !!

வடம்ஸ் மாமி..
பதி, விரதம் என்றிருக்கும்
ஒரு பதிவிரதை !!
அவளுக்கு உண்டு ஒரு நாள்
தனிக் கவிதை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home