Monday, December 12, 2005

பாட்டி எனும் பரமாத்மா - 9

ஜெயலட்சுமி, சங்கரி !!
கண்களாய் இரு
பெண்கள் !!

மூத்த பெண்
சமீபத்தில் வானில் !!
இளையவள் சமீபத்துக்கு
எதிர்பதமாம் பெருங்களத்தூர் எனும்
அதுவான கானில் !!

பேரன் கள்! என
பெயரெடுக்கா
பேரன்கள்!!
உள்ளம் கள்ளமில்லா
பேத்திகள் !!

கணக்கிட்டுக்
கொள்ள முடியா
கொள்ளு பேரன்கள்,
கொள்ளு பேத்திகள் !!

சித்தி அவள் லஷ்மணனுக்கு !!
சித்தி அடையாத எழுத்துக்களால்
பிரசித்தி பெற்ற
வாதூலன் எனும் எழுத்தாளனுக்கு !!

-- தொடரும்